Tuesday, April 29, 2025

SaiBaba Song

 சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


என்வாழ்வை மாற்றிய வள்ளலே

கொடைவள்ளலே...என்நாதா


பனித்துளியில் நனைந்த புல்வெளிபோலே 

உருகிநிற்க்கிறேன் உன்முகம்காண...மெய்நாதா


உனைக்கான எத்தனை தவம்மிங்கு செய்தேனோ...என்நாதா

உன்அடிதொழ இப்பிறவிஎடுத்தேனோ...மெய்நாதா


உன்பாதமே என்சொற்கமே ..என்நாதா

என்உள்ளமே நீகுடிகொண்ட கோயிலே...மெய்நாதா


நெருப்பில்லாமல் புகையுமோஉன்விருப்பமில்லாமல் உனைக்காண முடியுமோ...

தண்ணீரின்றி தாகம் தனியுமோஉன்அருளின்றி உனைவாழ்த்திப்பாட இயலுமோ...என்நாதா


பசுகன்றுக்கு பால்தரமறுக்குமோ 

உன்குழந்தையின் இருளும் இங்கே தீருமோ...என்நாதனே உயிர்நாடியே ஜீவஜோதியே...


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


எளிமையின் அடையாளமே என்நாதா,

ஏழையின் அடைக்கலமே...அருள்நாதா 


சத்தமில்லாமல் சரித்திரம்படைக்கும் என்நாதா 

உன்சக்தியால் மக்கள்குறைபோக்கிய மெய்நாதா...


தீபமேற்ற எண்ணெய்தரமறுத்த மனமில்லாமனிதர்முன்னே 

தண்ணீரினால் விளக்கேற்றினாய் அல்லவா...என்நாதா 


யாசகம்பெற்று மக்கள் பசிபோக்கினாய் அல்லவா...அருள்நாதா 

எல்லாஉயிரையும் உன்அன்பால்  அரவணைத்தாய் அல்லவா...மெய்நாதா


காணிக்கைபெற்று கர்மக்கணக்கை தீர்த்தாய் அல்லவா...என்நாதா

உதிகொடுத்து உண்பக்தர் கர்மவினைகளை உதித்தாய் அல்லவா...மெய்நாதா


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


எங்கும் நீஎதிலும் நீ...என்நாதா 

உண்மையும் நீதன்மையும் நீ...மெய்நாதா


உச்சமும் நீஉயர்வும் நீ...என்நாதா 

பாசமும் நீநேசமும் நீ...மெய்நாதா


அன்பும் நீபண்பும் நீ...என்நாதா 

அறநெறியும் நீஎன் முகவரியும் நீ...மெய்நாதா

சக்தியும் நீபக்தியும் நீ...என்நாதா 


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


வினாவும் நீவிடையும் நீ...என்நாதா 

வியாழனும் நீவியப்பும் நீ...மெய்நாதா


அதிசயமும் நீஅதிர்ஷ்டமும் நீ...என்நாதா 

உதியும் நீஉதிரமும் நீ...மெய்நாதா


உணவும் நீஉணர்வும் நீ...என்நாதா 

சுற்றமும் நீவாழ்வின்மாற்றமும் நீ...மெய்நாதா

தெய்வதாயும் நீதெய்வசக்தியும் நீ...என்நாதா 


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


உன்பாதமே என்சொற்கமே ..என்நாதா

என்உள்ளேமே நீகுடிகொண்ட கோயிலே...மெய்நாதா


நெருப்பில்லாமல் புகையுமோஉன்விருப்பமில்லாமல் உனைக்காண முடியுமோ...

தண்ணீரின்றி தாகம் தனியுமோஉன்அருளின்றி உனைளவாழ்த்திப்பாட இயலுமோ...என்நாதா


பசு கன்றுக்கு பால் தரமறுக்குமோ 

உன்குழந்தையின் இருளும் இங்கே தீருமோ...என்நாதனே என்தேவேனே ஜீவஜோதியே உயிர்நாடியே...


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


சாய்ராம்....


No comments:

Post a Comment