Tuesday, April 29, 2025

*****************நண்பன் ********************

 *****************நண்பன் ********************

தாய் உயிர் கொடுத்தாள்
தந்தை அறிவைக் கொடுத்தார் ....

நண்பா நீ மட்டும் தான் 
இவ்வுலகில் எனக்கு முகவரி கொடுத்தாய் ....

ஆம் இந்த வேலையில்லா  பட்டதாரியை
வேலையுள்ள  பட்டதாரி ஆக்கினாய் ....

தாயிடமும் நண்பனிடமும் மட்டுமே
பகிர்ந்துக் கொண்ட வார்த்தை
பசிக்குது என்று ....

வேரில்லா மரங்கள் இல்லை
நல்ல நண்பனில்லா மனிதனில்லை ....

தாயில்லாமல் குழந்தை பிறப்பது இல்லை
அது நட்பை சுவாசிக்காமல் இறப்பது இல்லை ....

வரவு செலவு இல்லா வாழ்க்கை இல்லை
நம் நட்பில் வரவு மட்டுமே,  செலவேயில்லை .....

துன்பம் என்றால் நாம் முதலில் அழைப்பது
கடவுளை அல்ல நம் நண்பனைத்தான் ....

இவ்வுலகில் காசில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை
நல்ல நட்பை தவிர ....

என் மீது எனக்கே நம்பிக்கையில்லாத போதும்
என் மீது நம்பிக்கை வைத்தவன் நீ ....

மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள்
அது தவறு என்று உன் நட்பை சுவாசித்ததும்
உணர்ந்து கொண்டேன், ஆம் உன் நட்பும் மாறாதது என்று.....

நண்பா இறைவனுக்கும் ஒருப்படி மேல் நீ ,
ஆம் தவறு செய்தால் கடவுள் கூட  தண்டிப்பார்,
ஆனால் நீ மட்டுமே  மறுமுறை தவறு செய்ய விடாமல் தடுப்பாய் .....

நட்பு என்பது வேறொன்றுமில்லை
பல தாய் வயிற்றில் பிறந்த ஒர்  குழந்தை .....

- கார்த்திகேயன் பிச்சை 

Eye donation

 மனிதா நன்றாக யோசி, நாம் மறைந்த பின் மண்ணிடம் மண்ணாக விட்டுச்செல்லும் நம் கண்ணை, 

                                               கண்ணில்லா நம் சகோதர,சகோதரிகளிடம் தானமாக கொடுத்து, நம் கண்ணெயும் 
                                                                                                                                                                           வாழவைக்கலாமே!

மனிதா நன்றாக யோசி, நாம் பார்த்த இவ்வுலகை, இதுவரை தன் முகத்தைகூட பார்க்கமுடியாத மற்றும் 
                                               அகக்கண்ணால்  இவ்வுலகை காணும் நம் உடன்பிறவா கண்ணில்லா 
                                               சொந்தங்களுக்கு புறக்கண்ணை கொடுத்து புதிய உலகை காட்டி செல்லலாமே!

மனிதா, வாழும்போது செய்யும் தானத்தை விட, வாழ்ந்த பின் செய்யும் தானமே சிறந்தது அதிலும் கண் தானம் 
                தலை சிறந்தது என்பேன்! 
                கண்ணை தானமாக கொடு, நம் கண்ணாவது இன்னும் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு செல்லட்டும் ! 

எங்கு இருக்கிறாய் பாபா... என்று வருவாயோ பாபா...

 ம்ம் ம்ம் ம்ம் ....


எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

குளிர் மேகமாய் வருவாயோ பாபா...இல்லை
சுடர் சூரியன்போல் காட்சி தருவாயோ பாபா...இல்லை

பனியில் நனைந்த மலர்கள் போல் மலர்வாயோ பாபா...இல்லை
வானில் வானவில்போல் காட்சி தருவாயோ பாபா...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

அம்மாவின் கற்பூர பிரசாதம்போல் வருவாயோ பாபா...இல்லை
காக்கடா ஆராத்தியின் தீபத்தில் தெரிவாயோ பாபா...இல்லை

கோயிலில் மணிஓசையாய் ஒலிப்பாயோ பாபா...இல்லை
உன் திருஉருவ சிலையில் இருந்து காட்சி தருவாயோ பாபா...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

துள்ளிக்குதித்து ஓடும் புள்ளிமான் போல் பாசமாய் பக்கத்தில் வருவாயோ பாபா ...இல்லை
குறும்புதனம் செய்யும் குட்டி குழந்தைபோல் என்னை அரவணைப்பாயோ பாபா ...இல்லை

இல்லை வானில் உயர பறக்கும் பருந்துபோல் பறந்து வருவாயோ பாபா ...இல்லை
வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம் போல் கண்முன்னே வந்து மறைவாயோ பாபா ...இல்லை

ம்ம் ம்ம் ம்ம் ....

எங்கு இருக்கிறாய் பாபா...
என்று வருவாயோ பாபா...

காத்து நிற்கிறேன் பாபா...
உனைக்காண காத்து நிற்கிறேன் பாபா...

ஓம் நமச்சிவாய, இறைவன் சிவன் அபிஷேகம்.

 ஓம் நமச்சிவாய, இறைவன் சிவன் அபிஷேகம்.


ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

இளகிய மனம் கொண்ட என் ஈசனுக்கு இளநீர் அபிஷேகம்...இளநீர் அபிஷேகம்...
பறந்த மனம் கொண்ட என் பரமேஸ்வரனுக்கு பன்னீர் அபிஷேகம்...பன்னீர் அபிஷேகம்...

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

அகிலத்தை ஆட்சி செய்யும் என் ஆண்டவனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம்...அமிர்தத்தால் அபிஷேகம்...
தியானத்தின் அதிபதியான என் தில்லைநாதனுக்கு தேனால் அபிஷேகம்...தேனால் அபிஷேகம்...

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

பஞ்சபூதங்களையும் தன்கட்டுக்குள் வைத்திருக்கும் என் பஞ்ச அருணாசலேஸ்வரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்...பஞ்சாமிர்த அபிஷேகம்
சங்கடங்களை தீர்க்கும் என் சதாசிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகம்...சந்தனத்தால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

திருவிளையாடல் புரியும் என் திருச்சிற்றம்பலத்தானுக்கு திருநீறு அபிஷேகம்...திருநீறு அபிஷேகம்
நெற்றிக்கண் கொண்ட என் நீலகண்டனுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்...நெல்லிப்பொடி அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

அன்பே உருவான என் அருணாச்சலேஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம்...அன்னத்தால் அபிஷேகம்
மங்களம் உண்டாக்கும் என் மஹேஸ்வரனுக்கு மஞ்சளால் அபிஷேகம்...மஞ்சளால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என் அண்ணாமலையனுக்கு அரிசிமாவால் அபிஷேகம்...அரிசிமாவால் அபிஷேகம்
தர்ம தலைவன் என் தட்சிணாமூர்த்திக்கு தயிரால் அபிஷேகம்...தயிரால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

அறநெறியான வாழ்வை கற்று தந்த என் நடராஜனுக்கு நெய்யால் அபிஷேகம்...நெய்யால் அபிஷேகம்
பக்தி தாகம் தீர்க்கும் என் திகம்பரனுக்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்...கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

நல்ல எண்ணம் தரும் என் நாகநாதனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம்...நல்லெண்ணெய் அபிஷேகம்
எளியவருக்கும் அடைக்கலம் தரும் என் லிங்கேஸ்வரனுக்கு எலுமிச்சை அபிஷேகம்...எலுமிச்சை சாரால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

காக்கும் கரம் கொண்ட என் கபாலீஸ்வரருக்கு கரும்பு சாரால்  அபிஷேகம்
பக்தனின் பாவங்களை போக்கும் என் பரமேஸ்வரனுக்கு பாலால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

பிறவி பயனை அள்ளித்தரும் என் பஞ்ச நாதனுக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம்
சக்தியை கொடுத்திடும் என் பரசிவனுக்கு சர்க்கரையால் அபிஷேகம்

ஈஸ்வரா...சர்வேஸ்வரா...ஓம்...

தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா

 ஓம் சாய்ராம்,


தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா

தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா

தானம் என்றேன் விளம்பரம் வேண்டாம் என்றாய் பாபா
சோம்பேறித்தனம் என்றேன் எறும்பை காண்பித்தாய் பாபா
கோபம் என்றேன் குழந்தை சிரிப்பால் அணைத்தாய் பாபா
துரோகம் என்றேன் கடந்து செல் என்றாய் பாபா
ஏமாற்றம் என்றேன் எது கிடைக்குமோ அது கிடைக்கும் என்றாய் பாபா...

பக்தி என்றேன் பனிமழையாய் வந்தாய் பாபா
தீபம் என்றேன் திரியாய் வந்தாய் பாபா
மாலை என்றேன் பூ மலராய் வந்தாய் பாபா
தீர்த்தம் என்றேன் மழைச்சாரலாய் வந்தாய் பாபா
இறைவா என்றேன் ஒரு புன்னகை பூத்தாய் பாபா

பொன்பொருள் என்றேன் அது மாயை என்றாய் பாபா
வசதிவாய்ப்பு என்றேன் மன நிம்மதியே பெரிய வசதி என்றாய் பாபா...
வேலைவாய்ப்பு என்றேன் விடாமுயற்சி என்றாய் பாபா...
வாழ்க்கை என்றேன் வாழ்ந்து காட்டு என்றாய் பாபா
ஆனந்தம் என்றேன் பேரானந்தமே பரமானந்தம் என்றாய் பாபா....

தாகம் என்றேன் அமிர்தமாய் வந்தாய் பாபா
அன்பு என்றேன் அன்பு தாயாய் வந்தாய் பாபா
பசி என்றேன் அன்னபூரணியாய் வந்தாய் பாபா
குழந்தை என்றேன் லட்டு பாபாவாக வந்தாய் பாபா
ஆசிர்வாதம் என்றேன் அடைமழையாய் வந்தாய் பாபா
மகிழ்ச்சி என்றேன் பாசமழையாய் வந்தாய் பாபா


- கார்த்திகேயன் பிச்சை

பொன்னும் பொருளும் வேண்டாம்

 ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்

 
பொன்னும் பொருளும் வேண்டாம்
உன் அன்பும் அருளும் போதும்

பாபா எனும் தியானம்
அது விண்ணை மிஞ்சும் ஞானம்

உள்ளம் உனைக்காண ஏங்கும்
என் எண்ணம் உன்னோடு வாழும்

பாபா பாபா பாபா
நீயே எந்தன் பாபா...

ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்

அமைதியாய் அமர்ந்திருக்கும் பாபா
அகிலத்தை ஆட்சிசெய்யும் பாபா

எல்லா உயிரும் நீயே
என்தன் உயிரும் நீயே

உயிரே உயிரே நீயே
எல்லா உயிரும் நீயே

எண்ணும் எழுத்தும் நீயே
சொல்லும் செயலும் நீயே

அமைதியாய் அமர்ந்திருக்கும் பாபா
அகிலத்தை ஆட்சிசெய்யும் பாபா

எல்லா உயிரும் நீயே
என்தன் உயிரும் நீயே

உயிரே உயிரே நீயே
எல்லா உயிரும் நீயே

எண்ணும் எழுத்தும் நீயே
சொல்லும் செயலும் நீயே

ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்

பொன்னும் பொருளும் வேண்டாம்
உன் அன்பும் அருளும் போதும்

பாபா எனும் தியானம்
அது விண்ணை மிஞ்சும் ஞானம்

உள்ளம் உனைக்காண ஏங்கும்
என் எண்ணம் என்றும் உன்னோடு வாழும்

ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்   ம்கும்

- சாய்ராம் 

Are you Lord Hari?...Or Lord Shivana?...

 நா நா ...நா நா ...நா நா ...

இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

இந்த அறியாத மனம் இங்கே கேட்குதுதுது.....
நீ ஹரியா, இல்லை சிவனா, இல்லை ஹரி ஹர சுதனா...என்றுறுறு...
உன்னை உணர நித்தம் நித்தம் இங்கே மனம் துடித்தது...

நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

புறக்கண்ணால் காணும்பொது பூக்களின் மனமும், நிறமும் இங்கே வேறுதான் அல்லவா...
எல்லா மனிதனின் முகமும், குணமும் இங்கே வேறுதான் அல்லவா...
நித்தம் நித்தம் பிறக்கும் மணித்துளியும் இங்கே வேறுதான் அல்லவா...

நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...

எல்லா பொருளின் நிழலின் நிறமும் இங்கே ஒன்றுதான் அல்லவா...
இருகண்கள் இருந்தாலும் பார்வை இங்கே ஒன்றுதான் அல்லவா...

மனிதன் மொழியாலும் இனத்தாலும் பிரிந்தாலும் பக்தி இங்கே ஒன்றுதான் அல்லவா...
பல அருவிகள் இங்கே இருந்தாலும் அது சேருமிடம் கடலில்தான் அல்லவா....

பலமொழிகள் இங்கே இருந்தாலும், அது சேருமிடம் ஒன்றுதான் அது செவிதான் அல்லவா...

நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

பொருள் இல்லாத சொல்லும்,
அம்பில்லாத வில்லும் இங்கே வீண்தான் அல்லவா...

பக்தி இல்லாத வாழ்க்கையும்,
உன்னை உணராத மனமும்ம்ம்... இங்கே வீண்தான் அல்லவா...

பொருள் இல்லாத சொல்லும்,
அம்பில்லாத வில்லும் இங்கே வீண்தான் அல்லவா...

பக்தி இல்லாத வாழ்க்கையும்,
உன்னை உணராத மனமும்ம்ம்... இங்கே வீண்தான் அல்லவா...

இந்த அறியாத மனம் இங்கே கேட்குதுதுது.....
நீ ஹரியா, இல்லை நீ சிவனா, இல்லை நீ ஹரி ஹர சுதனா...என்றுறுறு...

உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...
நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்றுறுறு...

உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்...
ஆம் நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்றுறுறு...

நா நா ...நா நா ...நா நா ...
இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

For Volunteer

 சாய்ராம்


தன்னிகரற்ற தன்னலமற்ற தன்னார்வ தொண்டனே, தேவதூதனே
அடியேன், என்னதவம் செய்தேனோ உன்புகழை இங்கு நான்பாட, பக்தேனே மகாபக்தேனே போற்றி போற்றி ...

சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ....பா ...கம பா ...

பல்லாயிரம் பக்தர்கள்காண உருவாக்கினாய் இத்திருக்கோயிலையல்லவா...
கோயிலின் நிர்வாகமே, உன் தியாகமே...
பாலில் கரைந்த சக்கரைபோலே மறைந்துநிற்கிறது உன்பக்தியே, இது தெய்வ சக்தியே...

சுடர் சூரியனை உருக்கி பொற்பல்லக்கு செய்து
அதில்உம்மை ஊர்வலமாய் சுமந்து சென்றாலும் ஈடுஇணையாகதல்லவா, நீர்செய்த இத்திருகோடைக்கு...

கதிரவனே கண்விழிக்கும்முன்னே, எம்மகவானுக்கு பட்டாடையுடுத்தி, படையலிட்டு...
அதிகாலை ஆரத்தியால் ஆராதனை செய்தாயல்லவா, தேவகுருமார்களே, என்தெய்வத்தாயின் திருமகேளே...

சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...

வியாழன்தோறும், ஊர்வலமாய் ஊர்ந்துவரும் ஊர்திகளை, பக்குவமாய் அடுக்கினாய் புத்தகம்போலே அல்லவா, பக்தேனே மகாபக்தேனே...
குளிரிலும், பனியிலும், வெயிலிலும், மழையிலும் நனைந்தாய் அல்லவா...என்நேசனே...

உலகில்உள்ள அனைத்து மலர்களையும் உன்பாதத்தில் சமர்பித்தாலும் உன்சேவைக்கு ஈடுஇணையாகதல்லவா, என்நண்பனே...

சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...


பசியாரவரும் பக்தர்களுக்கு பாசமாய் பரிமாறினாய், பிரசாதத்தை மகாபிரசாதத்தை அல்லவா...
காற்கடுக்க பலமணிநேரம் நின்றுகொண்டு சமையல் செய்தாய் அல்லவா, தேவ தேவதைகளே...

இந்த அன்னபூர்ண தெய்வசெயலுக்கு,
வானவில்லை வளைத்து தொட்டிலாக்கி அதில்உம்மை தாலாட்டினாலும், அது போறாதல்லவா...என் சகோதர சகோதிரிகளே...

செய்யும் செயலில் மேன்மையான செயல், தூய்மைசெய்யும் தொழில்என்பேன்...
உங்களின் இத்திருப்பணிக்கு, வானில்உள்ள வின்மீன்களை மலர்மாலையாய் உம்திருக்கழுத்திலிட்டாலும்,
உம்திரசேவைக்கு அது ஈடுஇணையாகதல்லவா...நேசனே, மகானேசனே...

ஆரத்திபமேற்றி எம்ஆதவனை ஆராதனை செய்ய உதவும்
உம்திருசேவைக்கு தேவாமிர்தத்தால் அர்ச்சனை செய்தலும்...ஈடுஇணையாகதல்லவா...

சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...


கோயிலின் நிர்வாகமே, உன் தியாகமே...
பாலில் கரைந்த சக்கரைபோலே மறைந்துநிற்கிறது உன்பக்தியே, இது தெய்வ சக்தியே...

எம்மகவானுக்கு பட்டாடையுடுத்தி, படையலிட்டு...
அதிகாலை ஆரத்தியால் ஆராதனை செய்யும், தேவகுருமார்களே, என்தெய்வத்தாயின் திருமகேளே...

குளிரிலும், பனியிலும், வெயிலிலும், மழையிலும் சேவை செய்யும், சீடனே, தெய்வசீடனே...

காற்கடுக்க பலமணிநேரம் நின்றுகொண்டு சமைத்து பரிமாறும், தேவ தேவதைகளே, நீர் தேவலோகோ தேவ தேவதைகளே...

மேன்மையான தூய்மை எனும் திருசேவை செய்யும், என்நேசனே, மகாநேசனே...

ஆரத்திபமேற்றி எம்ஆதவனை ஆராதனை செய்ய உதவும்...சேவகனே, மகாசேவகனே...

தன்னலமற்ற அனைத்து தன்னார்வ தொண்டர்களின் இத்தெய்வத்திருப்பணிக்கு
பிரியம்மா வீற்றியிருக்கும் தாமரையினால் அர்ச்சனை செய்தாலும், ஈடுஇணையாகதல்லவா...


சரி சரி சரி சரி, ரிக ரிக ரிக, கம கம கம ...பா ...கம பா ...


- சாய்ராம்

How are you baba?...Song

 Lala la lalala lalala...


  Oh my lord...
  Lovely God
  You are my God....Baba baba

                       Kaiseko Baba?...
                       Bawnara Baba?...
                       How are you Baba?...
                       Nalla Irukingala Baba?...
           
Lala la lalala lalala...

  You are very Nice,
  You are very Kind,
  You are very Sweet, 
  You are very Soft, Baba baba...

Lala la lalala lalala...

  Oh my lord...
  Lovely God
  You are my God....Baba baba

  Kana Kayaa Baba?...
  Annam Thinara Baba?...
  Had your food Baba?...
  Sapitingala Baba?...Baba baba...

Lala la lalala lalala...

  So gaya Baba?...
  Nidra pothunara Baba?...
  Have you slept peacefully Baba?
  Nalla thoongningala Baba?...Baba baba...

  Lala la lalala lalala...

  Oh my lord...
  Lovely God
  You are my God....Baba baba...
  
  People are saying,,,You don't like anything,
 
                                 You don't love anything,
     
                                 You don't want anything...Baba baba...But It was wrong, yes it's wrong...
                                 You love devotees, 
                                 You like devotees, 
                                 You want to see all devotees..Baba baba...

Lala la lalala lalala...

  Oh my lord...
  Lovely God
  You are my God...

                      Kaiseko Baba?...
                      Bawnara Baba?...
                       How are you Baba?...
                       Nalla Irukingala Baba?...Baba baba...

  You are very Nice,
  You are very Kind,
  You are very Sweet, 
  You are very Soft, you are my love... Baba baba...

Lala la lalala lalala...

  Oh my lord...
  Lovely God
  You are my God....Baba baba...

Sairam


      







Baby Song

 அஹா அஹா அஹா அஹா அஹா அஹா


செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா

முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா

ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா

ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா

உன் மழலைக்குரலை கேட்கவேண்டும் பாபா
உன் குறும்புத்தனத்தை ரசிக்க வேண்டும் பாபா

உன் மழலைக்குரலை கேட்கவேண்டும் பாபா
உன் குறும்புத்தனத்தை ரசிக்க வேண்டும் பாபா

உன் குழந்தை முகத்தை காணவேண்டும் பாபா
உனை நெஞ்சாறகொஞ்சவேண்டும் பாபா

உன் குழந்தை முகத்தை காணவேண்டும் பாபா
உனை நெஞ்சாறகொஞ்சவேண்டும் பாபா....

அஹா அஹா அஹா அஹா அஹா அஹா

செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா

முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா

ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா

ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா

உனை தோளில் வைத்து சுமக்கவேண்டும் பாபா
நீ தவழ்ந்து வரும் அழகை காணவேண்டும் பாபா

உன் பிஞ்சு விரலை பிடித்து நடக்கவேண்டும் பாபா
உன் பஞ்சு பதத்தில் பதிக்கவேண்டும் கோடிமுத்தங்கள் பாபா...

உனை தோளில் வைத்து சுமக்கவேண்டும் பாபா
நீ தவழ்ந்து வரும் அழகை காணவேண்டும் பாபா

உன் பிஞ்சு விரலை பிடித்து நடக்கவேண்டும் பாபா
உன் பஞ்சு பதத்தில் பதிக்கவேண்டும் கோடிமுத்தங்கள் பாபா...

உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...

உன்னோடு வாழவேண்டும் பாபா,
நீ நெஞ்சொடு தூங்கவேண்டும் பாபா...

உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...

உன்னோடு வாழவேண்டும் பாபா,
நீ நெஞ்சொடு தூங்கவேண்டும் பாபா...

உனை உள்ளங்கையால் தாங்கவேண்டும் பாபா...
உன் அழகுசிரிப்பினிலே மயங்கவேண்டும் பாபா...

அஹா அஹா அஹா அஹா அஹா அஹா


செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா

முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா

ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா

ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா

பக்தனாக வரவில்லை பாபா, நான் இங்கு பக்தனாக வரவில்லை பாபா...
உனைக் கொஞ்சும் அப்பனாக வந்துள்ளேன் பாபா...

பக்தனாக வரவில்லை பாபா,
உனைக் கொஞ்சும் அப்பனாக வந்துள்ளேன் பாபா...

அஹா அஹா அஹா அஹா அஹா அஹா

செல்லகுட்டி பாபா
தங்ககட்டி பாபா

முத்துக்குட்டி பாபா
வைரக்கட்டி பாபா

ஓடோடிவா விளையாட ஓடோடிவா
ஓடோடிவா பாபா ஓடோடிவா

ஆராரிரோ பாபா
ஆராரிரோ பாபா

SaiBaba Song

 சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


என்வாழ்வை மாற்றிய வள்ளலே

கொடைவள்ளலே...என்நாதா


பனித்துளியில் நனைந்த புல்வெளிபோலே 

உருகிநிற்க்கிறேன் உன்முகம்காண...மெய்நாதா


உனைக்கான எத்தனை தவம்மிங்கு செய்தேனோ...என்நாதா

உன்அடிதொழ இப்பிறவிஎடுத்தேனோ...மெய்நாதா


உன்பாதமே என்சொற்கமே ..என்நாதா

என்உள்ளமே நீகுடிகொண்ட கோயிலே...மெய்நாதா


நெருப்பில்லாமல் புகையுமோஉன்விருப்பமில்லாமல் உனைக்காண முடியுமோ...

தண்ணீரின்றி தாகம் தனியுமோஉன்அருளின்றி உனைவாழ்த்திப்பாட இயலுமோ...என்நாதா


பசுகன்றுக்கு பால்தரமறுக்குமோ 

உன்குழந்தையின் இருளும் இங்கே தீருமோ...என்நாதனே உயிர்நாடியே ஜீவஜோதியே...


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


எளிமையின் அடையாளமே என்நாதா,

ஏழையின் அடைக்கலமே...அருள்நாதா 


சத்தமில்லாமல் சரித்திரம்படைக்கும் என்நாதா 

உன்சக்தியால் மக்கள்குறைபோக்கிய மெய்நாதா...


தீபமேற்ற எண்ணெய்தரமறுத்த மனமில்லாமனிதர்முன்னே 

தண்ணீரினால் விளக்கேற்றினாய் அல்லவா...என்நாதா 


யாசகம்பெற்று மக்கள் பசிபோக்கினாய் அல்லவா...அருள்நாதா 

எல்லாஉயிரையும் உன்அன்பால்  அரவணைத்தாய் அல்லவா...மெய்நாதா


காணிக்கைபெற்று கர்மக்கணக்கை தீர்த்தாய் அல்லவா...என்நாதா

உதிகொடுத்து உண்பக்தர் கர்மவினைகளை உதித்தாய் அல்லவா...மெய்நாதா


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


எங்கும் நீஎதிலும் நீ...என்நாதா 

உண்மையும் நீதன்மையும் நீ...மெய்நாதா


உச்சமும் நீஉயர்வும் நீ...என்நாதா 

பாசமும் நீநேசமும் நீ...மெய்நாதா


அன்பும் நீபண்பும் நீ...என்நாதா 

அறநெறியும் நீஎன் முகவரியும் நீ...மெய்நாதா

சக்தியும் நீபக்தியும் நீ...என்நாதா 


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


வினாவும் நீவிடையும் நீ...என்நாதா 

வியாழனும் நீவியப்பும் நீ...மெய்நாதா


அதிசயமும் நீஅதிர்ஷ்டமும் நீ...என்நாதா 

உதியும் நீஉதிரமும் நீ...மெய்நாதா


உணவும் நீஉணர்வும் நீ...என்நாதா 

சுற்றமும் நீவாழ்வின்மாற்றமும் நீ...மெய்நாதா

தெய்வதாயும் நீதெய்வசக்தியும் நீ...என்நாதா 


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


உன்பாதமே என்சொற்கமே ..என்நாதா

என்உள்ளேமே நீகுடிகொண்ட கோயிலே...மெய்நாதா


நெருப்பில்லாமல் புகையுமோஉன்விருப்பமில்லாமல் உனைக்காண முடியுமோ...

தண்ணீரின்றி தாகம் தனியுமோஉன்அருளின்றி உனைளவாழ்த்திப்பாட இயலுமோ...என்நாதா


பசு கன்றுக்கு பால் தரமறுக்குமோ 

உன்குழந்தையின் இருளும் இங்கே தீருமோ...என்நாதனே என்தேவேனே ஜீவஜோதியே உயிர்நாடியே...


அஅஅஅஅஅஅஅஅஅ...


சாய்நாதா சத்குருநாதா என்குருநாதா 

போற்றி போற்றி...


சாய்ராம்....