Tuesday, June 24, 2025
Lord Muruga Song
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
திரு கார்த்திகை பெண்களால் வளர்க்கபெற்ற கார்த்திகேயா ...எங்கள் கார்த்திகேயா...முருகா கார்த்திகேயா...
அமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...பஞ்சாமிர்தத்தின் சொந்தகாரன் நீதானே...முருகா நீதானே
திருப்பரங்குன்றத்திலே திருமணம் செய்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
தேவதை தெய்வானையை கரம்பிடித்த எங்கள் சுப்ரமண்யா...முருகா சுப்ரமண்யா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
திருசெந்தூரில் சூரனையே சூறையாடிய சூரபத்ரா, எங்கள் சண்டிகேஸ்வரா...முருகா சண்டிகேஸ்வரா...
பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...
பழநிமலையிலே பழமே எனக்கு, ஞான பழமே எனக்கு என தவமிருந்த, எங்கள் பாலகா...தங்க பாலகா...
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
சுவாமிமலையிலே, சிவனுக்கே, பரமசிவனுக்கே...ஓம் என்ற மந்திரத்தை கற்றுகொடுத்த சுவாமிநாதா, எங்கள் ஞானபண்டிதா...
கோவாசம் தனியே, சூரனைக்கொன்ற உன் கோவாசம் தனியே, திருத்தணிகை மலையிலே குடிகொண்ட சண்முகா...முருகா சண்முகா
பழமுதிர்சோலையிலே வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தெய்வதிருச்செல்வி வள்ளியை கரம்பிடித்த வடிவேலா...தங்க வடிவேலா
வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
நம்பி வந்தவரை வாழவைக்கும் வேலவா...வெற்றிவேலவா...சக்திவேலவா...
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவா...எங்கள் ஆண்டவா...அழகு ஆண்டவா...
ஆறுமுகம் கொண்ட ஷண்முகா...முத்து ஷண்முகா...முருகா ஷண்முகா....
Tuesday, June 17, 2025
About Baba Song
சாய்ராம்....
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
இருளில் ஒளியாய் வந்தாயே நீ பாபா...
ஆதரவற்றோர்க்கு தந்தையாய் இருப்பாயே நீ பாபா....
உனை நினைக்கும்போது காற்றில் கவலை கரைகின்றதே பாபா...
உனைக் காணும்போது கண்ணில் நீர் வழிகின்றதே பாபா...
உன் அருளால் வாழ்க்கை இங்கே வரமானதே பாபா...
எதிர்காலமும் இங்கே வசந்தமானதே பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
நீ பிறந்த ஊரும் அறியோம்...பாபா...
பூமியின் சொர்க்கம் அது ஷீரடி தானே, பாபா...
உலகின் அருபெருமருந்து அது உன் உதிதானே...பாபா...
காலத்தையும் மாற்றிடுவாய் பாபா...
இங்கு காலனையும் விரட்டிடுவாய் பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
- கார்த்திகேயன் பிச்சை
Subscribe to:
Posts (Atom)