சாய்ராம்....
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
இருளில் ஒளியாய் வந்தாயே நீ பாபா...
ஆதரவற்றோர்க்கு தந்தையாய் இருப்பாயே நீ பாபா....
உனை நினைக்கும்போது காற்றில் கவலை கரைகின்றதே பாபா...
உனைக் காணும்போது கண்ணில் நீர் வழிகின்றதே பாபா...
உன் அருளால் வாழ்க்கை இங்கே வரமானதே பாபா...
எதிர்காலமும் இங்கே வசந்தமானதே பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
பாபா...
உன் பிறப்பும் அறியோம், உன் பெரும் அறியோம்...
நீ பிறந்த ஊரும் அறியோம்...பாபா...
பூமியின் சொர்க்கம் அது ஷீரடி தானே, பாபா...
உலகின் அருபெருமருந்து அது உன் உதிதானே...பாபா...
காலத்தையும் மாற்றிடுவாய் பாபா...
இங்கு காலனையும் விரட்டிடுவாய் பாபா...
மண்ணில் வந்த மாணிக்கமே பாபா...
மனித வாழ்வில் வந்த பொக்கிஷமே பாபா...
எல்லையில்லா ஆனந்தமே பாபா...
எட்டுத்திக்கும் உன்புகழே பாபா...
- கார்த்திகேயன் பிச்சை
No comments:
Post a Comment