ஸ்ரீ சாய் நிர்வாண் ஷடகம்
பொங்கும் பொறாமை இல்லை
ஆர்ப்பரிக்கும் ஆசையும் இல்லை
கொந்தளிக்கும் கோபம் இல்லை
யார்மீதும் வெறுப்பும் இல்லை...
ஆட்டிப்படைக்கும் அஹங்காரம் இல்லை
எட்டி உதைக்கும் தலைக்கணமும் இல்லை
செல்வத்தின் மீது துளியும் எண்ணமில்லை
பணத்தின் மீது எந்த மோகமும் இல்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
எதிர்காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை
கடந்த காலத்தில் எந்த இழப்பும் இல்லை.
எதிரியாய் யாருமில்லை
அரவணைக்க கரங்கள் இல்லை...
பத்தவைக்கும் பகைமை இல்லை
வத்திவைக்கும் வஞ்சமில்லை
துன்பம் தரும் துரோகமில்லை
யாருக்கும் இங்கே பயமுமில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
பக்தி இல்லா வாழ்க்கை இல்லை
சக்தி இல்லாமல் சிவனும் இல்லை
வசதி வாய்ப்பு தேவையில்லை
ஸ்ரீ சாய் நாமமின்றி வேறேதும் தோன்றவில்லை...
திரு சாயின் அருளின்றி வேறேதும் அருமருந்து இங்கில்லை...
வாழ்க்கையில் வெற்றி தோல்வி ஏதுமில்லை
இருளில் நிழலின் உதவி தேவையில்லை
தன்னம்பிக்கை இல்லா வாழ்க்கை வாழ்ந்து பயனில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
உதிரும் உறவுகள் மீது பற்றில்லை.
எதிர்பார்க்கும் நண்பர்கள் மீது நாட்டமில்லை
எல்லையில்லா வாழ்க்கை இல்லை
வரன்கள் எளிதில் கிடைப்பதில்லை...
தண்ணீரின்றி உலகமில்லை
காற்றின்றி மனிதனில்லை
சூரியனுக்கு வெளிச்சம் தேவையில்லை
மீன்கள் தாகம் அறிவதில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
வளைவு நெளிவில்லா பாதையில்லை
எமனை ஏமாற்றிய மனிதனில்லை
இயற்கை சுயநலம் கொள்வதில்லை
இருளின்றி வெளிச்சத்திற்கு மதிப்பில்லை...
வேறின்றி மரங்கள் இல்லை
தாயின்றி பிள்ளை இல்லை
கடவுளன்றி பக்தனில்லை
பக்தனை என்றும் கடவுள் கைவிட்டதில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
எதுவும் இங்கே நிரந்தரமில்லை
அதை உணர்ந்தால் மனதில் பாரமில்லை
வாசத்திற்கு எங்கும் உருவமில்லை
பக்தியை அளக்கும் கருவி இங்கில்லை
ஸ்ரீ சாய் அறியாதது ஏதுமில்லை
அவர் பாதமின்றி சொர்க்கம் வேறேதுமில்லை
அவர் சன்னதியில் கிடைக்காத மனநிம்மதி இங்கில்லை
அவர் அருளால் தீராத மன குறையுமில்லை...
பேரானந்தம்...ஸ்ரீ சாய்
எங்கும் சாய், எதிலும் சாய்...
முற்பொழுதும் சாய், என்னுள்ளும் சாய்...
- கார்த்திகேயன் பிச்சை
No comments:
Post a Comment