Friday, October 24, 2025

Lord Saibaba Song

நா நா ...நா நா ...நா நா ... இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி .... இந்த அறியாத மனம் இங்கே கேட்குது..... நீ ஹரியா, இல்லை சிவனா, இல்லை ஹரி ஹர சுதனா...என்று... உன்னை உணர நித்தம் நித்தம் மனம் இங்கே துடித்தது... நா நா ...நா நா ...நா நா ... இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி .... புறக்கண்ணால் காணும்பொது பூக்களின் மனமும், நிறமும் இங்கே வேறுதான் அல்லவா... எல்லா மனிதனின் முகமும், குணமும் இங்கே வேறுதான் அல்லவா... நா நா ...நா நா ...நா நா ... இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி .... உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்... எல்லா பொருளின் நிழலின் நிறமும் இங்கே ஒன்றுதான் அல்லவா... இரு கண்கள் இருந்தாலும் பார்வை இங்கே ஒன்றுதான் அல்லவா... மனிதன் மொழியாலும் இனத்தாலும் பிரிந்தாலும் பக்தி இங்கே ஒன்றுதான் அல்லவா... நா நா ...நா நா ...நா நா ... இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி .... பொருள் இல்லாத சொல்லும், அம்பில்லாத வில்லும் இங்கே வீண் தான் அல்லவா... பக்தி இல்லாத வாழ்க்கையும், உன்னை உணராத மனமும்ம்ம்... இங்கே வீண் தான் அல்லவா... இந்த அறியாத மனம் இங்கே கேட்குது..... நீ ஹரியா, இல்லை நீ சிவனா, இல்லை நீ ஹரி ஹர சுதனா...என்று...  a உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்... நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்று... உன்னை உள்ளூர உணர்ந்தபின்னே புரிந்துகொண்டேன்... நீயே ஹரி, நீயே சிவன், நீயே ஹரி ஹர சுதன்...என்று... நா நா ...நா நா ...நா நா ... இறைவா... இறைவா...அரும்பெரும் இறைவா போற்றி ....

No comments:

Post a Comment